நாமக்கல், செப்.15: நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத் துறை சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டது. சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணித் திட்டம் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், கண்காட்சி அமைக்கப்பட்டது. இதில், வண்ண பொடிகளால் கோலம் போடப்பட்டிருந்தது.