புதுகை மாவட்ட விளையாட்டரங்கில் கல்லூரிகளுக்கான நீச்சல் போட்டி

புதுக்கோட்டை, ஆக.14: புதுக்கோட்டை மன்னர் கல்லூரி சார்பில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் மற்றும் ஆண்களுக்கான நீச்சல் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று நடைபெற்றது.மன்னர் கல்லூரி முதல்வர் சுகந்தி தலைமை வகித்தார். இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக விளையாட்டுக்குழு செயலாளர் பழனிச்சாமி, ஆண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர் தரன் தங்கத்துரை, பெண்கள் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளார் மாலதி, மாவட்ட நீச்சல் சங்கத்தின் தலைவர் முருகப்பன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த சுமார் நீச்சல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 150 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.இதில் தேர்வு செய்யப்படுவோர் அகில இந்திய பல்கலை கழகங்களுக்கு இடையேயான நீச்சல் போட்டிகளில் அனுமதிக்கப்படுவர்.

Related Stories: