மருதூர் தெற்கு இரட்டை கடைவீதியில் சேதமடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு

வேதாரண்யம், ஆக.14: வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கு இரட்டை கடை வீதியில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியால் கொள்ளிடம் குடிநீர் பிரதான குழாயில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அப்பாதையில் குடிநீர் ஏற்றும் பணி தடைபட்டது. இதனால் தென்னடார், கோடியக்கரை வரையிலான 18 ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த கிராமங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.இந்நிலையில் பாதிப்படைந்த குழாய் பகுதியில் சீரமைப்புக்கான பணிகள் தொடங்கியது. இதனால் இப்பகுதி வழியே போக்குவரத்து தடைசெய்யப்பட்டு வேதாரண்யம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி (வாய்மேடு வழி) தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து பஞ்சநதிக்குளம் வழியாக மாற்று சாலையில் கடந்த இரண்டு நாட்களாக திருப்பிவிடப்பட்டது. தற்போது குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்து மருதூர் வழியாகவே துவங்கி உள்ளது.

Related Stories: