நாகை, ஆக.11: போஷன் அபியான் தேசிய ஊட்டசத்து குழுமத்தின் கீழ் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாகை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.சப்-கலெக்டர் கமல்கிஷோர் தலைமை வகித்தார். கீழையூர், வேதாரண்யம், தலைஞாயிறு வட்டாரத்திற்கு உட்பட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோரின் ஊட்டசத்து நிலையை மேம்படுத்துதல், குழந்தைகள் இறப்பு, கர்ப்பிணிகளின் இறப்பு விகிதத்தை குறைத்தல், குழந்தைகளின் குள்ளத்தன்மை, எடைக்குறைவு, ரத்தசோகை குறைத்தல் ஆகியவை குறித்து குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் சித்ரா, கல்யாணி ஆகியோர் பேசினர்.