உறவினர்கள் சாலை மறியல் வீரதீர செயல் புரிந்த தேசிய பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூர், ஜூலை 26: வீரதீர செயல் புரிந்த தேசிய பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தேசிய பெண் குழந்தை தின விருது பெற (காசோலை ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டு பத்திரம்) 5 வயதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தை (டிசம்பர் 31ன் படி) பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல் மற்றும் வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கலாம். மேலும் ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதி திருத்தல் போன்ற வீரதீர செயல் புரிந்தவர்கள் தகுதியானவர்கள். இவர்கள் ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் தங்களது விபரத்தை மாவட்ட ஆட்சியரகம், சமூகநல அலுவலகம், தரைதளம் அறை எண்.20ல் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Related Stories: