பழநி நகராட்சி அறிவுரை காமராஜர் பிறந்தநாள்
குஜிலியம்பாறை, ஜூலை 24: குஜிலியம்பாறை அருகே சி.அம்மாபட்டியில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் உள்ளிட்ட தேசத்தலைவர்கள், சுற்றுச்சூழல், சமுதாய மேம்பாட்டு பணிகள் பற்றிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.2500, ரூ.1500, ரூ.1000 வீதம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள், ஊர்மக்கள் பலர் கலந்து கொண்டனர்