புதன்சந்தையில் மாடுகள் விலை உயர்வு

சேந்தமங்கலம், ஜூலை 24: பக்ரீத் பண்டிகையொட்டி கேரளா வியாபாரிகள் வருகையால் புதன்சந்தையில் மாடுகள் விலை உயர்ந்துள்ளது.நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் செவ்வாய்தோறும் மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருவது வழக்கம். மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாடுகளை வாங்க, விற்க வியாபாரிகள் சந்தைக்கு வருவதுண்டு. வறட்சி காரணமாக விவசாயிகள் தங்கள் வளர்த்த வந்த மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பக்ரீத் பண்டிகை வருவதால் நேற்று கேரளாவில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்திருந்தனர். இதனால் மாடுகள் விலை உயரந்தது. கடந்த வாரம் ₹20 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட இறைச்சி மாடு, இந்த வாரம் ₹21 ஆயிரத்திற்கும், ₹42 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கறவை மாடு ₹43 ஆயிரத்திற்கும், கடந்த வாரம் ₹10 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கன்றுகுட்டிகள் ₹11 ஆயிரத்திற்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட விலை உயர்ந்துள்ளது.

Related Stories: