உயிர்சேதம் தவிர்ப்பு 26ம் தேதி காஸ்குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, ஜூன்19: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 26ம் தேதி காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெற்று உள்ள நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் எரிவாயு உருளை இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற 26ம் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, எரிவாயு  சிலிண்டர் இணைப்பு குறித்து தங்களது குறைகளை தெரிவிக்க விரும்பும் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெற்று உள்ள நுகர்வோர் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் நேரில் தெரிவிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Related Stories: