பழநி, மே 23: பொதுமக்கள் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து உபயோகிக்க வேண்டுமென பாலசமுத்திரம் பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. பழநி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு பாலாறு அணைப்பகுதியில் ராட்சச கிணறு அமைத்து குடிநீர் பெறப்படுகிறது. பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீரின் தரத்தினை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் மேல்நிலை தொட்டிகள், பிரதானக்குழாய் மற்றும் குடிநீர் விநியோகிக்கும் அனைத்து குழாய்களும் உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.