கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கைக்கான கலந்தாய்வு

கிருஷ்ணகிரி, மே 23:  கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 27, 28ம் தேதிகளில் நடக்கிறது.  இதுகுறித்து கல்லூரி முதல்வர் சாரதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த மாணவர்கள், வெளிநாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் பணியில் உள்ளனர். மேலும், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கு தனிப்பிரிவு செயல்படுகிறது.  கல்லூரியில் முதலாமாண்டில் உள்ள 480 இடங்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு, வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடக்கிறது. 27ம் தேதி 300க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களும், 28ம் தேதி 300 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்ற மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. இதற்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தனித்தனியாக அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் கிடைத்தவர்கள் மற்றும் கிடைக்காதவர்கள், தங்களின் தகுதிக்கான அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் சேர்க்கைக் கட்டணம் ஆகியவற்றுடன் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: