ஆச்சாள்புரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு தர்ம அடி

கொள்ளிடம், மே 22: கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் தேவி (6) பெயர் மாற்றப்பட்டுள்ளது. 3 வருடத்திற்கு முன் தேவியின் தாய் இறந்து விட்டதால், தேவி தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறாள். தற்போது பள்ளி விடுமுறை விடப்பட்டதால், தேவியை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வரகூர் பேட்டையை சேர்ந்த மாதவனின் பெரியப்பா ரவி (60) என்பவர் கடந்த 10 நாட்களாக வரகூர் பேட்டைக்கு அழைத்து சென்று, நேற்று மீண்டும் தேவி சொந்த ஊருக்கு வந்தாள். அப்போது சிறுமி உடல்நிலை சரியில்லாததால் அவரது பெற்றோர்  கொள்ளிடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த ஊர்பொதுமக்கள் இதற்கு காரணமான ரவிக்கு தர்ம அடி கொடித்து, கொள்ளிடம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: