பொன்னமராவதி, ஏப்.22: பொன்னமராவதி பகுதியில் 100சதவீதம் தேர்ச்சி பெற்று பல பள்ளிகள் சாதனை படைத்துள்ளது. பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 84 மாணவர்களும் தேர்ச்சி பெற்று தொடர்ந்து 4வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.இதேபோல வலையபட்டி சதம்பரம் பள்ளி, பொன்னமராவதி அமல அன்னைப்பள்ளி, லயன்ஸ் பள்ளி ஆகிய பள்ளிகளும் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.