100% வாக்களிக்க வலியுறுத்தி வாரச்சந்தையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

அரியலூர், மார்ச் 26: நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் மக்கள் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அரியலூர் வாரச்சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆர்டிஓ சத்தியநாராயணன், தாசில்தார் கதிரவன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: