திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் நவீன மயமாக்கப்பட்ட விற்பனை பிரிவு தொடக்கம்

திருச்செங்கோடு, மார்ச் 15: திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு மற்றும் விற்பனை பிரிவு திறப்பு விழா நடந்தது. திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா, விற்பனை பிரிவு மற்றும் விரிவுபடுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட ஆட்டோமொபைல்ஸ் மற்றும் ஆயில் பிரிவு துவக்க விழா ஆகியவை நடந்தது. விழாவிற்கு, சங்க தலைவர் பாரி கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் எவரெஸ்ட் ரவி வரவேற்றார். பொருளாளர் ராமசாமி, துணை தலைவர் செல்வகுமார், துணை செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். திருச்செங்கோடு   எம்எல்ஏ பொன்.சரஸ்வதி ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். டிவிஎஸ் குழுமங்களின் தலைவர் நாச்சிமுத்து குத்துவிளக்கேற்றி வைத்து, புதிய ஆட்டோமோபைல்ஸ் மற்றும் ஆயில் பிரிவை துவக்கி வைத்தார். விழாவில் ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் சீனிவாசா கந்தசாமி, செயலாளர் கொங்கு சேகர், பொருளாளர் சுந்தரராஜன், துணைத்தலைவர் அசோக்குமார், துணை செயலாளர் ராஜவேலு மற்றும் நிர்வாக்குழு உறுப்பினர்கள், டிவிஎஸ் நிறுவன அதிகாரிகள், அசோக் லேலண்ட் அதிகாரிகள், தொழிலதிபர்கள், நகர பிரமுகர்கள், லாரி உரிமையாளர்கள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: