கரூர், மார்ச் 15: கரூர் பகுதியில் லாரிகளில் மணல் கடத்தல் அதிகரித்து வருகிறது.கரூர் மாவட்டத்தில் இயங்கி வந்த மணல் குவாரிகள் கோர்ட்டு உத்தரவின்படி மூடப்பட்டன. மணல் குவாரிகள் மூடப்பட்டாலும் லாரிகளில் அனுமதியின்றி மணல் எடுத்து செல்வது தொடர்கிறது. மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அமராவதி ஆற்றில் ஐந்து இடங்களில் மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 105 ரூபாய் மாட்டு வண்டிக்கு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் லாரிகளில் மணல் எடுத்து செல்வது அதிகரித்துள்ளது.