நத்தம், மார்ச் 14: வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள் மூலம் நடைபெற உள்ளது. இதுகுறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தி வாக்களிப்பது குறித்தும், யாருக்கு வாக்களித்தோம் என்ற விபரம் தெரிந்து கொள்வது பற்றியும், வாக்குப்பதிவுக்கு முன்னதாக கையெழுத்திடுவது பற்றியும் செயல் விளக்கம் அளித்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு வாக்குப்பதிவு உதவி அலுவலரான நத்தம் தாசில்தார் ஜான்பாஸ்டின் டல்லஸ், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் மாயழகர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.