ரத்தினசபாபதி நிறுவனத்தில் மகளிர்தின விழா கொண்டாட்டம்

நாமக்கல், மார்ச் 14: ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. நாமக்கல் ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவனம், சட்டபணிகள் ஆணை குழு, பசுமை மகளிர் கூட்டமைப்பின் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, இலவச சட்ட உதவி மையம், குடும்ப நல ஆலோசனை மையம் துவக்க விழா நடந்தது. நிறுவனத்தின் தலைவர் நடேசன் தலைமை வகித்தார். பசுமை மகளிர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை வரவேற்றார். நிறுவனத்தின் இயக்குநர் தில்லைசிவக்குமார் மகளிர் தின உறுதி மொழி வாசித்தார். விழாவில் சட்டபணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் சார்பு நீதிபதி கோகுலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். விழாவில் பசுமை மகளிர் கூட்டமைப்பின் பெண்கள் மற்றும் தொழில் பயிற்சி பெறும் மகளிர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மகளிர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறிவுகொடி நன்றி கூறினார்.

Related Stories: