காரைக்கால் அரசு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் 16ம்தேதி நடக்கிறது

காரைக்கால், மார்ச் 14: காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இருதயம் மற்றும் இருதய அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் நாளை மறுநாள் (16ம் தேதி) நடைபெறவுள்ளது.

இது குறித்து, மாவட்ட துணை கலெக்டர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பு: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் மாதம் இரு முறை நடைபெறும் முகாமாக,  காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் நாளை மறுநாள்(16ம் தேதி) ஜிப்மர் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் இருதயம் மற்றும் இருதய அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இதில், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: