தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதியிலும் உள்ள எம்எல்ஏ அலுவலகங்களுக்கும், கூட்டுறவு சங்கங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவர் மற்றும் துணைத்தலைவர் அலுவலக அறைகளுக்கும் சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியும் வரை, இந்த அலுவலகங்கள் திறக்க முடியாது. அதேபோல், கூட்டுறவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு வாகனங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.