சுள்ளங்குடியில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்

அரியலூர், மார்ச் 8: சுள்ளங்குடியில் பொது விநியோக குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தொடர்பாக பொதுமக்கள் குறைதீர்  கூட்டம்   நாளை நடக்கிறது. அதன்படி அரியலூர் வட்டத்தில் சுள்ளங்குடி, உடையார்பாளையம் வட்டத்தில் பிராஞ்சேரி, செந்துறை வட்டத்தில் சிறுகடம்பூர், ஆண்டிமடம் வட்டத்தில் திருகளப்பூர்  கிராமத்தில் குறைதீர் முகாம் நாளை நடக்கிறது. அரியலூர் வட்டத்துக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், உடையார்பாளையம் வட்டத்துக்கு பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர், செந்துறை வட்டத்துக்கு தனித்துணை கலெக்டர் சமூக பாதுகாப்பு திட்டம், ஆண்டிமடம் வட்டத்துக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளாரும் மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கூட்டத்தில் கூட்டுறவுத்துறையை சேர்ந்த அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். எனவே பொதுமக்கள் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர்  விஜயலட்சுமி   தெரிவித்துள்ளார்.

Related Stories: