பொன்னமராவதி, பிப்.14: பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் ஊராட்சி மணப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பொதுமக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் விழா நடந்தது. வட்டாரக்கல்வி அலுவலர் பால்டேவிட் ரொசாரியோ தலைமை வகித்தார். தலைமையாசிரியர் மாரிமுத்து வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் ராஜாசந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய மேற்பார் வையாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமுதாயக்கூடத்தில் இருந்து பெற்றோர்கள், கிராமக் கல்விக்குழுவினர், பள்ளி மேலாண்மைக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பிரோ, மேசை, நாற்காலிகள், பாய், விளையாட்டு பொருட்கள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், மைக், கடிகாரம், குடம், பலம், தேய்காய், பிஸ்கட் உள்ளிட்ட பல்வேறு பொருட் களை சீராக பெண்கள் ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்துச் சென்றனர். இவர்கள் கொண்டு சென்ற சீர் பொருட்களை தலைமையாசிரியர் மாரிமுத்து, ஆசிரியர் சுஜா மற்றும் மாணவர்கள் வரவேற்றனர். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி கலா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பாலு, ஆசிரியர் பயிற்றுநர் கள் கலந்து கொண்டனர். ஆசிரியை சுஜா நன்றி கூறினார்.