பாமக பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருவிடைமருதூர், பிப். 14: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த திருபுவனம் தூண்டில் விநாயகம்பேட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக முன்னாள் கிளை செயலாளர். மத பரப்புரை தொடர்பாக எழுந்த பிரச்னையில் கடந்த 5ம் தேதி இரவு ராமலிங்கம் வெட்டி கொலை செய்யப்பட்டார் இந்த கொலை வழக்கு தொடர்பாக ராமலிங்கத்தின் மகன் ஷியாம் சுந்தர், காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் கடந்த 7ம் தேதி 5 பேரையும், 9ம் தேதி 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கார் கடந்த 11ம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 12ம் தேதி காரின் உரிமையாளர் இப்ராஹிம் கைது ெசய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று காரைக்கால் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த முகம்மது ஹாசன் குத்தூஸ் (33) என்பவரை நேற்று திருவிடைமருதூர் போலீசார் கைது செய்தனர். கைது ெசய்யப்பட்ட முகம்மது ஹாசன் குத்தூஸ், காரைக்கால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவராக உள்ளார்.

Related Stories: