திருவாரூர் அருகே திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா

திருவாரூர், பிப். 14: திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவிற்குட்பட்ட திருப்பாம்புரத்தில் சேஷபுரீஸ்வரர் கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோயிலானது ராகு - கேது இரண்டிற்கும் பரிகார தலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியானது நேற்று மதியம் 2.02 மணியளவில் நடைபெற்றது. இதில் ராகு பகவான்  கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கும் இடம் பெயர்ச்சி நடைபெற்றது.  இதனையொட்டி பரிகார ராசிகளான ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் இந்த ராகு-கேது பெயர்ச்சியையொட்டி இக்கோயிலில் நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கிய நிலையில் நேற்று 2ம் கால பூஜைகள் நடைபெற்று இன்றுடன் (14ம் தேதி)  மூன்று கால பூஜைகள் நிறைவு பெறுகின்றன.  இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அசோக்ராஜா, மேலாளர் வள்ளிகந்தன் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

Related Stories: