இலத்தூரில் தி.மு.க கிராம சபை கூட்டம்

செங்கோட்டை, பிப்.13:  செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர், சீவநல்லூர், கிளாங்காடு கிராமங்களில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாபன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவி சங்கர் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் ஆதிதிராவிட அணி அமைப்பாளர் பரமசிவன், இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர் சுரேஷ்குமார், மாநில சிறுபான்மையினர் அணி துணைச்செயலாளர் ரசாக், மாவட்ட பொருளாளர் சேக் தாவூது, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ஷெரிப், விவசாய அணி அமைப்பாளர் முத்துராமலிங்கம், துணை அமைப்பாளர் கம்பிளி அருணாசலம், சீவநல்லூர் சாமிதுரை, வர்த்தக அணி வளன்அரசு, பேரூர் செயலாளர்கள் வெள்ளத்துரை, பூல்பாண்டியன்,  ஊராட்சி செயலாளர்கள் பிச்சையா, சிவசங்கர் ,கனியப்பா, குருசாமி, முருகேசன், மாணவரணி லியோன், அன்புசெல்வம், தாஸ், ஒன்றிய அவைத்தலைவர் கட்டாரி பாண்டியன், துணைச் செயலாளர் வாசுதேவன், பகவதிபுரம் கூட்டுறவு சங்க துணை தலைவர் மாரியப்பன், மாவட்ட  இளைஞரணி ஆறுமுகசாமி மற்றும் இந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை எடுத்துக்கூறினர். சோமு நன்றி கூறினார்.

Related Stories: