அரியலூர், ஜன.24: அரியலூர் அருகே அனுமதியின்றி மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாத்தம்பாடி தெற்கு தெருவை சேர்ந்த நாகமுத்து(65), அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரன்(54) ஆகியோர் அப்பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 13 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.