அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

அரியலூர், ஜன.24:   அரியலூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு  புரந்தானை  நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பெரம்பலூர் மாவட்டம் அசூர் கிராமத்தை சேர்ந்த துளசிராமன் (42) என்பவர் பஸ்சை  ஓட்டி வந்தார். இந்த பேருந்தில் பயணம் செய்த நாகமங்கலம் தெற்கு தெருவை  சேர்ந்த பாரத் (19), அதே பகுதியை சேர்ந்த அறிவழகன்(32), அவரது நண்பர்கள்  2 பேரும் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

 இதை  துளசிராமன் பஸ் படியில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் நாகமங்கலம் பஸ் நிறுத்ததில் நின்றபோது  ஓட்டுனர் துளசிராமனை தாக்கியுள்ளனர். தட்டிகேட்ட பயணிகளான கீழநத்தம்  கிராமத்தை ராஜ்குமார்(25), மதியழகன்(28) ஆகியோரையும் சேர்ந்து 4 பேரும்  தாக்கியுள்ளனர்.  இதில் படுகாயமடைந்த ஓட்டுனர் துளசிராமன்,  ராஜ்குமார், மதியழகன், ஆகியோர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் அரசு  பஸ் ஓட்டுனர் துளசிராமன் புகார் கொடுத்தார். போலீஸ்  இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்கு பதிந்து பாரத், அறிவழகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்ற  2 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: