கடையம் தோரணமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா

கடையம்,ஜன.22:  கடையத்திலிருந்து தென்காசி செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலை அருகில் தோரணமலை முருகன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில்  தைப்பூசத் திருவிழா  முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு விவசாயம் செழிக்க  அகத்திய பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு திருகல்யாணம் நடைபெற்றது. விழாவில் வேளாக்குறிச்சி ஆதினம் கலந்து கொண்டு ஆசி வழங்கினார். ஊட்டி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் நடந்தது. வள்ளியம்மாள் திருமுருகன் உயர்நிலைபள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி, பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது. தைப்பூச விழாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை முதல் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை தோரணமலை கோயில் அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

Related Stories: