தென்காசி, ஜன.22: தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா, பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து 740 மாணவிகளுக்கு தமிழக அரசின் மிதிவண்டி மற்றும் கடந்த கல்வி ஆண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி பேசினார். முன்னதாக தலைமையாசிரியை லோகநாயகி வரவேற்றார். முதுகலை ஆசிரியர் புஷ்பராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். இடைநிலை ஆசிரியை அமலாஜான் தொகுத்து வழங்கினார்.