மின் கம்பி உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டரில் தீவிபத்து

குமாரபாளையம், ஜன.10: மின் கம்பியில் உரசியதால், வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீப்பற்றி எரிந்தது.தேவூர் பகுதியில் இருந்து நேற்று மதியம், டிராக்டர் ஒன்றில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு குமாரபாளையம் வந்தது. காவேரி நகர் பகுதியில் உள்ள குறுக்கு சாலையில் டிராக்டர் நுழைய முயன்றபோது, சாலையின் மேலே இருந்த மின்கம்பியில் வைக்கோல் உரசியது.  இதில் இரண்டு கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் தீப்பொறி கிளம்பியது. இதனால் வைக்கோலில் தீ பற்றி எரியத்துவங்கியது. அதிர்ச்சியடைந்த டிராக்டர் டிரைவர் ஹைட்ராலிக்கை பயன்படுத்தி எரியும் வைக்கோலை தீயோடு சாலையில் கொட்டினார். அதிர்ஷ்டவசமாக அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவவில்லை. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

Related Stories: