அரியலூர், ஜன.3: அரியலூர் வட்டத்தில் ஏலாக்குறிச்சி, சன்னாவூர் (தெ) ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் சூரியமணல், வாழைக்குறிச்சி ஆகிய கிராமங்களிலும், ஆண்டிமடம் வட்டத்தில் அய்யூர் கிராமத்திலும் சிறப்பு குறைதீர் முகாம் தாசில்தார்கள் தலைமையில் நாளை (4ம்தேதி) நடைபெறுகிறது. இம்முகாமில் வருவாய்த்துறை சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.