நெல்லை, டிச. 11: நெல்லையப்பர், அழகியகூத்தர் கோயில்களில் 14ம் தேதி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 23ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் - காந்திமதியம்பாள் கோயிலில் மார்கழி மாத திருவாதிரை திருவிழா, வருகிற 14ம் தேதி காலை 8.30 மணிக்கு கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. 17ம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி- அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. சுவாமி சன்னதி 2ம் பிரகாத்தில் உள்ள பெரிய சபாபதி சன்னதி முன்பு 23ம் தேதி வரை அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை திருவெம்பாவை வழிபாடு நடக்கிறது.22ம் தேதி தாமிர சபையில் இரவு நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு, சிறப்பு தீபாராதனை நடக்கிறது. 23ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு பசு தீபாராதனை, 4 மணி முதல் 5 மணி வரை நடராஜர் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. ஏற்பாடுகளை ேகாயில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.இதேபோல் ராஜவல்லிபுரம் அழகியகூத்தர் செப்பரை கோயிலில், 14ம் தேதி காலை 7 மணிக்கு திருவாதிரை திருநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 16ம் தேதி சுவாமி, அம்பாள் பூ, சிம்ம வாகனத்திலும், 4ம் திருவிழாவில் சுவாமி -அம்பாள் ரிஷப வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது.