கராத்தே போட்டியில்வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் சாம்பியன்

கிருஷ்ணகிரி, டிச.11: காவேரிப்பட்டணம் அருகே பையூரில் உள்ள தனியார் பள்ளியில், 17வது மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, கராத்தே பெடரேசன் தலைவர் நடராஜன், செயலாளர் மாரியப்பன் ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தில் இருந்து 70க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில், வேப்பனஹள்ளி வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசும், ஒட்டுமொத்த கிராண்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தனர். இதன்மூலம் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த பள்ளியின் முதல்வர் அன்பழகன் மற்றும் ஆசிரியர்களை பள்ளி தாளாளர் கூத்தரசன் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: