நிலத்தகராறில் தம்பதிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விவசாயி கைது

சேந்தமங்கலம், டிச.7: நாமக்கல்  மாவட்டம் கொல்லிமலை குண்டூர்நாடு வெள்ளக்குழிப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி  சின்னுசாமி(50). இவரது மனைவி விஜயா(48). இவர்களுக்கும், அரியூர்நாடு கஸ்பா  பகுதியை சேர்ந்த விவசாயி செல்வம்(45), இவரது மனைவி சின்னம்மா(40)  குடும்பத்தினருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று  முன்தினம் சின்னுசாமி, விஜயா ஆகியோர் பிரச்னைக்குரிய நிலத்தில் உள்ள  வழித்தடத்தில் மாட்டை பிடித்துச்சென்றனர். அப்போது, அவர்களை வழிமறித்த  செல்வம் மற்றும் சின்னம்மா ஆகியோர், தகராறில் ஈடுபட்டனர். இது கைகலப்பாக  மாறியது. செல்வம், சின்னம்மா ஆகியோர் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு  சின்னுசாமி, விஜயாவை சரமாரியாக வெட்டினர்.

சத்தம் கோட்டு ஓடி வந்த  அப்பகுதி மக்கள், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு, சேந்தமங்கலம் அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வாழவந்திநாடு இன்ஸ்பெக்டர்  பொன்செல்வராஜ் வழக்குபதிவு செய்து, தம்பதியை அரிவாளால் வெட்டிய  செல்வத்தை கைது செய்தார். தலைமறைவாக உள்ள சின்னம்மாவை தேடி வருகின்றனர். 

Related Stories: