திமுக சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல், டிச.7:  நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், டாக்டர் அம்பேத்கரின் 62வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

டாக்டர் அம்பேத்கரின் 62வது நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான  காந்திசெல்வன், அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் ராணி,  பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், நகர பொறுப்பாளர் ஆனந்த்,  மாவட்ட  ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் இளமதி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு  பேரவை அமைப்பாளர் ஆனந்தன், சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் சம்பத்,  துணை அமைப்பாளர்கள்  சத்தியபாபு, டாக்டர் மதிவேந்தன், மேகநாதன், நகர  பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செல்வமணி, பால்ரவி, மனோகரன், ஆனந்தன்,  ஆனந்த், அன்பரசு, ரமேஷ், சரோஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருச்செங்கோடு:  தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில், திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள  அம்பேத்கர் சிலைக்கு, ஒன்றிய செயலாளர்  சரவணன் தலைமையில் மலர் அஞ்சலி  செலுத்தினர். ஆணவக்கொலைக்கு  எதிராக  தனிச்சட்டம் இயற்ற வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு அரசு  உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு  தருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட பொறுப்பாளர் வேங்கையன் முன்னிலை வகித்தார்.  கொள்கை பரப்பு செயலாளர் கோபி, முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: