நாமக்கல், டிச.7: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், டாக்டர் அம்பேத்கரின் 62வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
டாக்டர் அம்பேத்கரின் 62வது நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன், அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் ராணி, பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், நகர பொறுப்பாளர் ஆனந்த், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் இளமதி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஆனந்தன், சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர்கள் சத்தியபாபு, டாக்டர் மதிவேந்தன், மேகநாதன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செல்வமணி, பால்ரவி, மனோகரன், ஆனந்தன், ஆனந்த், அன்பரசு, ரமேஷ், சரோஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.