பரமத்திவேலூர் அருகே மணல் கடத்திய ஆட்டோ பறிமுதல் டிரைவர் கைது

பரமத்திவேலூர், டிச.7:  பரமத்திவேலூர் அருகே நன்செய்இடையாறு பகுதியில் மணல் கடத்திய ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.பரமத்திவேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு பகுதியில், இரவு நேரத்தில் காவிரி ஆற்றில் இருந்து சாக்கு மூட்டைகளில் மணலை கட்டி ஆட்டோ மற்றும் டூவீலரில் கடத்தி விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று, பரமத்திவேலூர் போலீசார் நன்செய்இடையாறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில், அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மணலுடன் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், நன்செய்இடையாற்றை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ்(40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: