பாம்பு கடித்து இருவர் சாவு

நெல்லை, டிச. 6:    சிவகிரி அருகே குமாரபுரத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன் (48). விவசாயியான  இவர் சம்பவத்தன்று வயலுக்கு சென்ற போது பாம்பு  கடித்து விட்டது. இதையடுத்து மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.  இதேபோல் பாம்பு கடித்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜபாளையம் போலீஸ் சரகம் அகிலாபுரம் ரயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் (58). என்பவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ராஜபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: