கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு குண்டாஸ்

திருவள்ளூர், டிச. 7: திருவள்ளூர் அடுத்த மேல்மணம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (47). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் தம்பியான இவரை, அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (32) என்பவர், முன்விரோதம் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தார். இதையடுத்து ராஜேஷ் உட்பட 6 பேரை வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் முரளிதரன் கைது செய்து சிறையில் அடைத்தார். இதில், முக்கிய குற்றவாளியான ராஜேஷை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் எஸ்.பி., பொன்னி பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில், ராஜேஷ் குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: