சிறுவனிடம் சில்மிஷம் பக்கத்து வீட்டு வாலிபர் கைது

திருவள்ளூர், டிச. 7: திருவள்ளூர் அடுத்த வயலாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் (56). இவரது 6 வயது மகன், ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இச்சிறுவன் கடந்த மே மாதம் 4ம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்லா என்ற செல்வமணி (32) என்பவர், சிறுவனை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறுவன் இதுபற்றி தனது தந்தையிடம் கூறியுள்ளான். அவர் கொடுத்த புகாரின்பேரில், வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிந்து, செல்வமணியை தேடி வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதமாக தலைமறைவாக இருந்த செல்வமணியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Related Stories: