பொன்னமராவதியில் தலைமை ஆசிரியர்கள் கூட்டம்

பொன்னமராவதி. டிச.6: பொன்னமராவதி வட்டாரவளமையத்தில அனைத்துஅரசுமற்றும் அரசுஉதவிபெறும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடந்தது. வட்டாரக்கல்விஅலுவலர் ராமதிலகம் தலைமைவகித்தார். இதில் கஜா புயலால் பாதிக்கப்பட்டபள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டசீரமைப்புபணிகள் சார்ந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.  அனைத்துஅரசுமற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகளிலும் தினமும் காலைமற்றும் மதியம் ஆகிய இருவேளைகளிலும் மாணவர்களின் வருகை விபரங்களை அலைபேசிசெயலி மூலம் பதிவுசெய்யவேண்டும் எனவும் இது குறித்த இடர்பாடுகள் ஏதேனும் இருப்பின் ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் வட்டாரகல்விஅலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். இதில் அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்களும் தங்கள் திட்டக்கூறுகள் சார்ந்து செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் எடுத்துரைத்தனர்.

Related Stories: