நாங்குநேரி, டிச. 6: அஞ்சல் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய பாஸ்புக் வழங்கப்படாததால் அச்சடிக்கப்பட்ட பக்கங்களில் வரவு வைத்து தரப்படுகிறது. இது சரியாக தெரியாததால் வாடிக்கையாளர்கள் தவிக்கின்றனர்.
நாங்குநேரியை அடுத்துள்ள தெய்வநாயகப்பேரி அஞ்சல் அலுவலகத்தில் தெய்வநாயகபேரி லெத்திகுளம் மேலூர் மற்று கீழுர் உள்பட பல்வேறு குக்கிராம பொதுமக்கள் சுமார் 1500க்கும் மேற்பட்டவர்கள் சேமிப்புக்கணக்கு துவங்கி பணம் சேமித்து வருகிறார்கள். அதிலிருந்து அவசர தேவைகளுக்கு பணம் எடுத்து பயன்படுத்துகிறார்கள். சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கணக்கு புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பதிவு பக்கங்கள் முடிந்த மற்றும் புதிய கணக்கு துவங்கியுள்ளவர்களுக்கு கடந்த சில மாதங்களாக புதிய கணக்கு புத்தகங்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.