வீடுகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி விசி கட்சியினர் சாலை மறியல்

கந்தர்வகோட்டை,டிச.5: புதுக்கோட்டை அருகே தென்னங்குடியில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும்போது  ஒரு சமூகத்தை  சேர்ந்த  பெண்ணை சிலர் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி எழுந்த பிரச்னையில் அப்பகுதி மக்கள் வீடுகளை நேற்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கீரனூர் டிஎஸ்பி மற்றும் உடையாளிபட்டி காவல் நிலைய போலீசார் ஒரு தரப்பினருக்கு மட்டும் சலுகை காட்டி தங்கள் புகாரை ஏற்கவில்லை என கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை - தஞ்சை நெடுஞ்சாலையில் நேற்று மதியம் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் மக்கள் மற்றும் விடுதலைசிறுத்தை கட்சியினர்  ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கணேஷ்நகர் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதன்  பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: