புதுக்கோட்டையில் காணாமல் போன 40 செல்போன்கள் மீட்பு உரியவர்களிடம் ஒப்படைக்க எஸ்பி நடவடிக்கை

புதுக்கோட்டை, டிச. 5: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணாமல் போன 40 செல்போன்களை போலீசார் மீட்டுள்ளனர். இதனை விரைவில் உரியவர்களிடம் ஒப்படைக்கவுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் முழுவுதும் பல்வேறு இடங்களில் செல்போன்கள் திருபோயின. இதனையடுத்து  அவ்வப்போது செல்போன் காணவில்லை என்று புகார் வந்தவண்ணம் இருந்தது. இதனையடுத்து புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ் தனிப்படை அமைத்து இந்த புகார்கள் குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து கடந்த 6 மாதம் காலமாக பல்வேறு கட்ட விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக பல்வேறு தொழில்நுட்பங்களின் உதவியுடன் திருடுபோன செல்போன்களை போலீசார் மீட்டுள்ளனர். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் காணாமல்போன 40 செல்போன்களை போலீசார் மீட்டுள்ளனர்.

இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மீட்ட செல்போன்களை உரியவர்களிடம் விரைவில் எஸ்பிசெல்வாராஜ் ஒப்டைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: