திருமானூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மனித சங்கிலி

அரியலூர்,நவ,21: அரியலூர் மாவட்டம் திருமானூரில், கும்பகோணம் பல்நோக்கு சமூகபணி மையம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு  பராமரிப்பு துறை சார்பில், திருமானூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியரை கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மனித சங்கிலி மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கும்பகோணம் பல்நோக்கு சமூக பணி மைய இயக்குனர் அருட்தந்தை ராபர்ட் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு, மற்றும் குழந்தை திருமணம் தடை செய்ய வேண்டும், குழந்தை தொழிலாளர்களை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனித சங்கிலி நடைபெற்றது. தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன், கும்பகோணம் பல் நோக்கு சமூக பணி மைய இணை இயக்குனர் டேவிட்ரஜேஷ், ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு துறை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Related Stories: