அரியலூரில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை

அரியலூர்,நவ.15:  அரியலூர் ராஜாஜி நகரில் வசிப்பவர் பன்னீர்செல்வம். இவர் சேலத்தில் பொதுப்பணித்துறை வரைபட அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அரியலூரில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று பன்னீர்செல்வத்தின் மனைவி மற்றும் மகனுடன் வேலை சம்பந்தமாக சென்னை சென்றுள்ளனர்.  இந்நிலையில் கொள்ளையர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த 15 சவரன் நகை மற்றும் 24 ஆயிரம் ரொக்கத்தினை திருடிச் சென்றனர்.வழக்கமாக காலை வேளையில் பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு வேலைக்கு வரும் பணியாட்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது  வீட்டின் கதவு மற்றும் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து   வீட்டு உரிமையாளரிடம் தெரிவிக்கவே பன்னீர் செல்வத்தின் மனைவி ஷோபனா அரியலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: