நாகை. நவ.14: நாகையில் 16ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும் 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் சென்னை டி.வி.எஸ். டிரைனிங் சர்வீஸ் உள்ளிட்ட முன்னனி நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு அளிக்க உள்ளனர். நாகை மாவட்டத்தை சார்ந்த 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தவறிய, ஐடிஐ., டிப்ளமோ படித்த இருபாலரும் 18 முதல் 24 வயதிற்குட்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.