நாகை, நவ.14: மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி நாகை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். நாகை மின் வட்ட கிளையின் சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், முத்தரப்பு ஒப்பந்தப்படி ரூ.380 தினக்கூலியாக வழங்கிட வேண்டும், பணி செய்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்கிடவேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாது காப்பு உபகரணங்களை வழங்கிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் திட்ட தலைவர் சிவராஜன் தலைமையில் நடைபெற்றது.