பள்ளிபாளையத்தில் திமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்

பள்ளிபாளையம், நவ.8: பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியில் திமுகவினர் ஈடுபட்டனர். பேருந்து பயணிகள் வியாபாரிகளுக்கு திமுகவினர் நிலவேம்பு கசாயத்தினை வழங்கினர். நகர திமுக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி, பொருளாளர் குமார், ஒன்றிய திமுக  பொறுப்பாளர் யுவராஜ், நகர அவைத்தலைவர் குளோப்ஜான், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் தங்கராஜ், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் வேல்முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் வினோத் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: