அரியலூர், அக். 30: அரியலூர் பெரிய தெருவில் உள்ள தேச மாரியம்மன் கோயிலில் 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதையொட்டி பரிவார தெய்வங்களான முருகன், விநாயகர், மூப்பனார், காளியம்மன் சுவாமிக்கு அலங்காரங்கள் செய்து மண்டல பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முனியமுத்து, வில்லான், சீனிவாசன், கருணாநிதி, காளிமுத்து, குபேரன், மருதமுத்து மனோகரன், சிவஞானம் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.