நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில் பூசாரிகளுக்கு இலவச மாடுகள்

நாமக்கல், அக்.16: நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அருகே நைனாமலை வரதராஜபெருமாள் கோயிலில், கடந்த 4 வாரமாக நடைபெற்ற புரட்டாசி உற்சவபெருவிழாவின் போது, பக்தர்கள் தானமாக பசுமாடு வழங்கினர். இந்த மாடுகளை கோயில் பூசாரிகளுக்கு இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி நேற்று கோயில் அடிவாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயில் பூசாரிகள் சங்க மாநில தலைவர் வாசு, 12 பூசாரிகளுக்கு மாடுகளை இலவசமாக வழங்கினார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: