ஊத்தங்கரை, அக்.16: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 87வது பிறந்த நாள் விழா மற்றும் சர்வதேச கை கழுவும் தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் லட்சுமி வரவேற்றார். உலகில் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்படுவது வயிற்றுப்போக்கு மூலம் என்பதால் அனைவரும் தமது கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு விளக்கி கூறினார். பின்னர் மாணவர்கள் அப்துல் கலாம் மற்றும் தூய்மை பாரதம் ஆகிய தலைப்புகளில் நடந்த கவிதை, பேச்சு, கட்டுரை போட்டிகளில் பங்கேற்றனர். உதவி ஆசிரியர்கள் லதா, அப்துல்கலாம் குறித்து கருத்துரை வழங்கினர்.